மக்களவைத் துணைத்தலைவர்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
மக்களவைத் துணைத்தலைவர் ( IAST : Lok Sabhā Upādhyakṣa) என்பவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையின் இரண்டாவது மிக உயர்ந்த பேரவை அலுவலர் ஆவார். இந்திய மக்களவைத் தலைவர் மரணம் அல்லது உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பு அல்லது சபையில் இல்லாவிட்டால் சபைக்குத் தலைமை தாங்கிச் செயல்படுவார். இந்தியாவில் மரபுப்படி எதிர்க்கட்சிக்குத் துணைத்தலைவர் பதவி வழங்கப்படுகிறது.[1]
மக்களவைத் துணைத்தலைவர்
Lok Sabhā ke Upādhyakṣa | |
---|---|
தற்போது காலியிடம் 23 சூன் 2019 முதல் | |
பதவி | துணைத் தலைவர் |
உறுப்பினர் | மக்களவை |
அறிக்கைகள் | |
நியமிப்பவர் | மாநிலங்களவை உறுப்பினர்கள் |
உருவாக்கம் | 30 மே 1952; 71 ஆண்டுகள் முன்னர் (1952-05-30) |
முதலாமவர் | ம. அ. அய்யங்கர் |
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மக்களவையின் முதல் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்களிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பேரவைத் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் மக்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்கும் வரை அல்லது தாமாக பதவியிலிருந்து விலகும் வரை பதவியில் இருப்பார். மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இவர் பதவியிலிருந்து நீக்கப்படலாம்.[2] இதற்கான தீர்மானத்தில் பெரும்பான்மையில், காலியிடங்களை அகற்றிய பிறகு, மொத்த பலத்தில் 50% அல்லது 50% க்கும் அதிகமாக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். மக்களவைக்குத் துணைத்தலைவர் பொறுப்பு என்பதால், மக்களவையில் உள்ள பெரும்பான்மையால் மட்டுமே இவரை நீக்கம் செய்ய முடியும். துணைத் தலைவர் பதவியிலிருந்தாலும், இவர் பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என்றாலும், தங்கள் கட்சியிலிருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை.
இந்தியக் குடியரசின் நாடாளுமன்ற மரபுப்படி எதிர்க்கட்சி உறுப்பினர்களிலிருந்து துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் மார்ச் 2021 நிலவரப்படி, குடியரசு வரலாற்றில் தனித்துவமாக, மக்களவையில் இப்பதவி காலியாக உள்ளது.[3]