பீ.பி பாதசாரிகள் பாலம்
From Wikipedia, the free encyclopedia
பீ.பி பாதசாரிகள் பாலம் (BP Pedestrian Bridge), அல்லது சுருக்கமாக பிபி பாலம் (BP Bridge), ஐக்கிய அமெரிக்காவில் சிகாகோ நகரில் உள்ள ஒரு தீராந்தி நடைபாலம் ஆகும். இப்பாலம் பிறிட்ஸ்கர் பரிசு-பெற்ற கட்டிடக் கலைஞர் பிராங்க் கெரியினால் வடிவமைக்கப்பட்டது. இது 2004 சூலை 16 இல் கிராண்ட் பூங்காவிலுள்ள மில்லெனியம் பூங்காவுடன் இணைந்து திறந்து வைக்கப்பட்டது.[1]
பிபி பாதசாரிகள் பாலம் BP Pedestrian Bridge | |
---|---|
ஆள்கூற்று | 41°52′58″N 87°37′14″W |
வாகன வகை/வழிகள் | பாதசாரிகள் |
கடப்பது | கொலம்பசு பாதை |
இடம் | சிகாகோ (குக் மாவட்டம்) ஐக்கிய அமெரிக்கா |
Characteristics | |
வடிவமைப்பு | தீராந்திப் பாலம் |
கட்டுமான பொருள் | துருவேறா எஃகு, வலுவூட்டிய பைஞ்சுதை, வன்மரம் |
மொத்த நீளம் | 935 அடிகள் (285.0 மீ) |
அகலம் | 20 அடிகள் (6.1 மீ) |
கீழ்மட்டம் | 14 அடி 6 அங். (4.4 மீ) |
History | |
வடிவமைத்தவர் | பிராங்க் கெரி |
Engineering design by | இசுக்கிட்மோர், ஓவிங்சு, மெரில் |
கட்டி முடித்த நாள் | மே 22, 2004 |
திறக்கப்பட்ட நாள் | சூலை 16, 2004 |
இப்பாலத்தின் கட்டுமானத்திற்கு பீ.பி நிறுவனம் $5 மில்லியன்கள் நிதியுதவி செய்தது. பிராங்க் கெரி வடிவமைத்த முதலாவது பாலம் இதுவாகும்.[2] பீபி பாலம் பாம்பு வடிவில் வளைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[3] அதன் சொந்த எடையால் ஏற்படும் கட்டமைப்புச் சிக்கல்கள் இல்லாமல் அதிக சுமைகளைத் தாங்க வடிவமைக்கப்பட்ட இப்பாலம், தகட்டு உலோகத்தைப் பயன்படுத்தியதற்காக பல விருதுகளை வென்றது. இந்தப் பாலம் அதன் அழகியலுக்குப் பெயர் பெற்றது.