பிலிப்பு (திருத்தூதர்)
From Wikipedia, the free encyclopedia
திருத்தூதரான புனித பிலிப்பு (கிரேக்க மொழி: Φίλιππος, Philippos) இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். கிறித்தவப் பாரம்பரியப்படி, இவரே கிரேக்கம், சிரியா முதலிய நாடுகளுக்கு கிறித்தவத்தைக் கொண்டுசென்றவர்.
விரைவான உண்மைகள் திருத்தூதரான புனித பிலிப்பு, திருத்தூதர் மற்றும் மறைசாட்சி ...
திருத்தூதரான புனித பிலிப்பு | |
---|---|
புனித பிலிப்பு, ஓவியர்: பீட்டர் பவுல் ரூபென்ஸ் | |
திருத்தூதர் மற்றும் மறைசாட்சி | |
பிறப்பு | Unknown பெத்சாயிதா, கலிலேயா |
இறப்பு | c.80 ஹிராபோலிஸ், சிலுவையில் அறையப்பட்டு |
ஏற்கும் சபை/சமயங்கள் | எல்லா கிறித்தவ பிரிவுகளும் |
திருவிழா | 3 மே - கத்தோலிக்கம், 14 நவம்பர் - கிழக்கு மரபுவழி திருச்சபை |
சித்தரிக்கப்படும் வகை | வயதான தாடி வைத்த மனிதராகவோ அல்லது ஒரு அப்பக்கூடையையும் சிலுவையையும் வைத்திருப்பது போன்றோ |
பாதுகாவல் | உருகுவை. |
மூடு
பிலிப்பு எழுதிய நற்செய்தி என்னும் நாக் அமாடி நூலகத்தில் உள்ள நூல் இவரால் எழுதப்பட்டது போல் தோன்றினாலும், அது அவ்வாறு அழைக்கப்படுவது திருத்தூதர்களுள் இவரின் பெயர் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே ஆகும்.
இவரின் விழாநாள் கத்தோலிக்க திருச்சபையில் நீதிமானான புனித யாக்கோபுவோடு (திருத்தூதர் யாக்கோபு அல்ல) சேர்ந்து மே 3இல் கொண்டாடப்படுகின்றது.