பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகம்
From Wikipedia, the free encyclopedia
பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகம் (Bactria–Margiana Archaeological Complex (சுருக்கமாக: BMAC), இப்பண்பாடு ஆமூ தாரியா எனும் ஆக்சஸ் ஆற்றின் கரையில் பிறப்பிடமாகக் கொண்டதால் இதனை ஆக்சஸ் நாகரிகம் (Oxus civilization) என்றும் அழைப்பர். இப்பண்பாட்டின் காலம் ஏறத்தாழ கிமு 2,250 - கிமு 1,700 இடைப்பட்ட காலம் ஆகும்.[1][2] [1][3] ஆக்சஸ் நாகரீகம் என அறியப்படும் பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகம் என்பது நடு ஆசியாவில் செப்புக் கால நாகரீகம் பற்றிய நவீன தொல்லியல் ஆய்வு நிலையாகும். கிமு. 2,200 - 1,700 களில் இன்றைய துருக்மேனிஸ்தான், வடக்கு ஆப்கானிஸ்தான், தெற்கு உஸ்பெக்கிஸ்தான், மேற்கு தஜிகிஸ்தான், ஆகியவற்றுடன் மேல் ஆமூ தாரியா ஆற்றை மையப்படுத்திய நிலப்பரப்பே அன்றைய பாக்திரியாவாக இருந்தது. ஆக்சஸ் பண்பாடு ஆமூ தாரியா ஆற்றின் மேல் பகுதியில் உள்ள தற்கால துருக்மேனிஸ்தானின் பாக்திரியா மற்றும் மார்கியானா பகுதிகளில் செழித்திருந்தது.[4] [5]இப்பகுதியில் தான் சொராட்டிரிய நெறியை தோன்றியது.
வடக்கு ஆப்கானித்தானில் அமைந்த பாக்திரியா எனும் தற்கால பல்கு மற்றும் தற்கால துருக்மேனிஸ்தானின் தென்கிழக்கில் உள்ள மார்கியானா எனும் தற்கால மெர்வி நகரத்தின் பாக்திரியா-மார்க்கியானா தொல்லியல் வளாகங்களை சோவியத் ஒன்றியத்தின் தொல்லியலாளர் விக்டர் சாரியாநிதி என்பவரால் 1976 இல் கண்டறியப்பட்டன.[6][7][8].[9][10][11][12]