தில்லியில் காற்று மாசு
From Wikipedia, the free encyclopedia
தில்லியில் காற்று மாசு (Air pollution in Delhi), இந்தியாவின் தேசியத் தலைநகர் தில்லி வலையத்தில் கடந்த பத்தாண்டுகளாக காற்றின் மாசு அதிகரித்துக் கொண்டுவருகிறது. உலகின் காற்றின் தரம் மிகக்குறைந்த நகரங்களில் ஒன்றாக் தில்லி உள்ளது..[3][4] இந்தியாவில் காற்று மாசுபாடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 மில்லியன் மக்கள் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் ஆஸ்துமாவால் உலகில் அதிக இறப்பு விகிதம் இந்தியாவில் உள்ளது. தில்லியில் காற்று மாசினால் 50 சதவீத குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் புவி அறிவியல் அமைச்சகம் அக்டோபர் 2018ல் ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி,. தில்லியின் காற்று மாசு, வாகனங்களின் கரியமிலவாயு உமிழ்வுககளால் 41%, தூசிகளால் 21.5% மற்றும் தொழிற்சாலைகள் காரணமாக 18% ஏற்படுவதாக குறித்துள்ளது.[1]
தில்லியின் காற்றின் தரக் குறியீடு பொதுவாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே நல்ல (0–50), திருப்திகரமான (51–100) மற்றும் மிதமான (101–200) நிலைகளில் உள்ளது. பின்னர் காற்றின் மாசு அக்டோபர் முதல் பிப்ரவரி முடிய மிக மோசமடைந்து (201–300), கடுமையானது (301–400), அல்லது அபாயகரமான (401–500+) அளவுகளை எட்டுகிறது. தில்லியைச் சுற்றியுள்ள வேளாண் பகுதிகளில் அறுவடை முடிந்த பிறகு கோதுமை வைக்கோலை எரித்தல், சாலைப் புழுதி, வாகன மாசுபாடு மற்றும் குளிர் காலநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால். .[2]நவம்பர் 2016ல், தில்லிப் பெரும் புகைமூட்டம் என அழைக்கப்படும் நிகழ்வில், காற்று மாசுபாடு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவை விட அதிகமாக அதிகரித்தது. PM2.5 மற்றும் PM 10 துகள்களின் அளவுகள் ஒரு கன மீட்டருக்கு 999 மைக்ரோ கிராம்கள், அதே நேரத்தில் அந்த மாசுபாடுகளுக்கான பாதுகாப்பான வரம்புகள் முறையே 60 மற்றும் 100 ஆகும். மேலும், 2022ல் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தின் காற்றுத் தரக் குறியீடு குறைந்தது 200க்கு மேல் உள்ளது..
1980 முதல் மற்ற மாநிலங்களில் விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு பயிர்களை எரிப்பதால் புகை மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் துகள்கள் உற்பத்தி செய்யப்படுவதால், தில்லியில் காற்று மாசு ஏற்படுகிறது.