தாகூர் மாளிகை, ஜோரசங்கோ
கல்கத்தாவில் உள்ள தாகூர் குடும்ப இல்லம் / From Wikipedia, the free encyclopedia
தாகூர் மாளிகை, கொல்கத்தா, பெங்காலி மொழியில் தாகூர் பாரி என்றழைக்கப்படுகிறது. இது இந்தியாவின், மேற்கு வங்காளம் மாநிலத்தில் வட கொல்கத்தாவில் உள்ள ஜோரசங்கோ என்னுமிடத்தில் உள்ள தாகூர் குடும்பத்தாரின் முன்னோர்களின் இல்லமாகும். தற்போது அது கொல்கத்தா 700007 முகவரியில் ஜோரசங்கோவில் உள்ள 6/4 துவாரகநாத் தாகூர் சந்தில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது.[1][2] இது கவிஞரும் முதல் ஐரோப்பியர் அல்லாதவருமான நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் பிறந்த வீடு ஆகும். அவர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியைக் கழித்த இடமும் இதுவே ஆகும். ஆகஸ்ட் 7, 1941 இல் அவர் இறந்த இடமும் இதுதான். தாகூர் மாறிகை என்பதானது ஒரு இடம் மட்டுமல்ல, அது வங்காளத்தின் உணர்ச்சியை வெளிப்படுத்துகின்ற அடையாளமாகும்.