டாக்டர் பாஸ்டஸ் (நாடகம்)
கிறித்தோபர் மார்லொவ் எழுதிய நாடகம் / From Wikipedia, the free encyclopedia
டாக்டர் பாசுடசு (Doctor Faustus) என்பது இங்கிலாந்து அரசி எலிசபெத் காலத்திய நாடக ஆசிரியரான கிறித்தோபர் மார்லொவ்வால் எழுதபட்ட ஒரு நாடகம் ஆகும். இது டாக்டர் பாசுடசு என்பவருடைய வாழ்க்கை மற்றும் துன்பமயமான மரணம் குறித்தது ஆகும். நாடகத்தின் முதன்மைப் பாத்திரமான பாசுட் என்ற பாத்திரத்திரமானது செருமன் கதைகளை அடிப்படையாகக் கொண்டு புனையபட்டது. இது 1589 மற்றும் 1592 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்டு 1592 க்கும் 1593 இடையில் நிகழ்ந்த மார்லோவின் மரணத்திற்கும் இடையில் மேடை ஏற்றபட்டிருக்கலாம். நாடகத்தின் இரண்டு வெவ்வேறு பதிப்புகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு காலத்தில் வெளியிடப்பட்டன.[1]