சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம்
ரோமில் உள்ள ஒரு தேவாலயம் / From Wikipedia, the free encyclopedia
புனித பவுல் பேராலயம் அல்லது சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் என்பது உரோமை நகரில் உள்ள தலைசிறந்த கத்தோலிக்க பேராலயங்களுள் ஒன்றாகும்[1]. இது அதிகாரப்பூர்வமாக Papal Basilica of St. Paul Outside the Walls (இலத்தீன்: Basilica Sancti Pauli extra moenia; இத்தாலியம்: Basilica Papale di San Paolo fuori le Mura) என்று அழைக்கப்படுகிறது. உரோமை நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பண்டைய நான்கு உயர் பேராலயங்களுள் இதுவும் ஒன்றாகும்[2]. பிற உயர் பேராலயங்கள்: புனித பேதுரு, புனித இலாத்தரன் யோவான், புனித மரியா ஆகிய பெருங்கோவில்கள் ஆகும்.
விரைவான உண்மைகள் சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் (Papal Basilica of St Paul Outside the Walls), அடிப்படைத் தகவல்கள் ...
சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் (Papal Basilica of St Paul Outside the Walls) | |
---|---|
உரோமை நகரின் சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் - முகப்புத் தோற்றம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | உரோமை (வத்திக்கான் நகர்-நாடு ஆளுகைக்குட்பட்டது) |
புவியியல் ஆள்கூறுகள் | 41°51′31″N 12°28′38″E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | இலத்தீன் |
மாகாணம் | லாத்சியோ |
மாவட்டம் | உரோமை |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | கி.பி. 4ஆம் நூற்றாண்டு |
நிலை | உயர் பேராலயம் |
தலைமை | பிரான்செஸ்கோ மோந்தெரீசி - தலைமைக் குரு (2009-) |
இணையத் தளம் | Official Website |
மூடு