சிமோன்
ஏதெசின் தளபதி / From Wikipedia, the free encyclopedia
சிமோன் அல்லது கிமோன் (Cimon or Kimon கிரேக்கம்: Κίμων; ஏ. 510 – 450 கிமு) என்பவர் கிரேக்கத்தில் கி.மு. 5ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த ஒரு ஏதெனிய அரசியல்வாதியும் தளபதியும் ஆவார். இவர் மராத்தான் போரில் வெற்றி பெற்ற மில்டியாட்டீசின் மகனாவார். கி.மு. 480–479-ல் கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் படையெடுப்பில் செர்கஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆற்றல்வாய்ந்த ஏதெனிய கடல் சாம்ராஜ்யத்தை உருவாக்குவதில் சிமோன் முக்கிய பங்கு வகித்தார். சிமோன் புகழ்பெற்ற ஒரு இராணுவ வீரராக ஆனார். மேலும் சலாமிஸ் போரில் ஈடுபட்ட பிறகு இராணுவத் தளபதி தரத்திற்கு உயர்ந்தார்.
சிமோன் | |
---|---|
சைப்பிரசின், இலார்னாக்காவில் உள்ள சிமோன்சின் மார்பளவு சிலை | |
பிறப்பு | அண். 510 ஏதென்ஸ் |
இறப்பு | கி.மு. 450 ( 59–60 வயது) சிட்டியம், சைப்பிரசு |
சார்பு | ஏதென்ஸ் |
தரம் | ஸ்ட்ராட்டெகாய்ஸ் (தளபதி) |
போர்கள்/யுத்தங்கள் | சலாமிஸ் போர் சலாமிஸ் போர் (சைப்ரசில்) |
கிமு 466 இல் யூரிமெடன் ஆற்றுப் போரில் பாரசீக கடற்படை மற்றும் இராணுவத்தை அழித்தது சிமோனின் மிகப்பெரிய வீரச்செயல்களில் ஒன்றாகும். கிமு 462 இல், எலட்களின் கிளர்ச்சிகளின் போது எசுபார்தான்களுக்கு ஆதரவாக இவர் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியுற்றது. இதன் விளைவாக, இவர் கிமு 461 இல் ஏதென்சிலிருந்து ஆஸ்ட்ராசிசம் (நாடுகடத்துதல்) செய்யப்பட்டார்; எவ்வாறாயினும், எசுபார்தாவிற்கும் ஏதென்சுக்கும் இடையில் கிமு 451 இல் ஐந்தாண்டு சமாதான உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராக செயல்பட 10 ஆண்டுகால நாடுகடத்தல் காலம் முடிவதற்குள் இவர் திரும்ப அழைக்கப்பட்டார். எசுபார்த்தன் சார்பு கொள்கையில் இவரின் பங்கேற்பிற்காக, இவர் அடிக்கடி லாகோனியலாளர் என்று அழைக்கப்படுகிறார். சிமோன் பெரிக்கிள்சுக்கு எதிராக ஏதெனியன் பிரபுத்துவப் பிரிவை வழிநடத்தினார்.