சால்வதோர் தாலீ
From Wikipedia, the free encyclopedia
சால்வதோர் தாலீ (Salvador Dali, மே 11, 1904 - ஜனவரி 23, 1989) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கட்டலன் இனத்தவரான, அடிமன வெளிப்பாட்டிய ஓவியர் ஆவார். இவரது முழுப்பெயர் சால்வதோர் தொமிங்கோ பிலிப்பெ ஜசிந்தோ தாலீ இ தொமெனிக் என்பதாகும். எசுப்பானியாவின் காத்தலோனியாவில் உள்ள பிகோரெசு (Figueres) என்னுமிடத்தில் பிறந்த இவர் ஒரு திறமையான படவரைவாளர். இவரது கவர்ச்சியான அடிமன வெளிப்பாட்டிய ஆக்கங்கள் பெரிதும் புகழ் பெற்றவை. சால்வதோர் தாலீயின் ஓவியத் திறன் மறுமலர்ச்சி ஓவியர்களின் செல்வாக்கினால் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. மிகவும் அறியப்பட்ட இவரது ஓவியமான நீங்கா நினைவு (The Persistence of Memory) 1931 ஆம் ஆண்டில் தீட்டி முடிக்கப்பட்டது. இவருக்குத் திரைப்படம், சிற்பம், நிழற்படக்கலை போன்ற கலைகளிலும் ஈடுபாடு இருந்தது.
விரைவான உண்மைகள் சால்வதோர் தாலீ, பிறப்பு ...
சால்வதோர் தாலீ | |
---|---|
நவம்பர் 29, 1939இல் சால்வதோர் தாலீ | |
பிறப்பு | சால்வதோர் தொமிங்கோ பிலிப்பெ ஜசிந்தோ தாலீ இ தொமெனிக் (1904-05-11)மே 11, 1904 பிகோரெசு, எசுப்பானியா |
இறப்பு | சனவரி 23, 1989(1989-01-23) (அகவை 84) பிகோரெசு, காத்தலோனியா, எசுப்பானியா |
தேசியம் | எசுப்பானியர் |
கல்வி | San Fernando School of Fine Arts, மத்ரித் |
அறியப்படுவது | ஓவியர், சிற்பி, எழுத்தாளர், புகைப்படக்கலைஞர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | நீங்கா நினைவு (1931) சிலுவையின் புனித யோவானின் கிறித்து (ஓவியம்) (1951) இறுதி இராவுணவு அருட்சாதனம் (ஓவியம்) (1955) மற்றும் பல |
அரசியல் இயக்கம் | கியூபிசம், ஆடுகுதிரைவாதம் (டாடா), அடிமன வெளிப்பாட்டியம் |
வாழ்க்கைத் துணை | காலா தாலீ |
மூடு