கோரி அரசமரபு
From Wikipedia, the free encyclopedia
கோரி அரசமரபு அல்லது குரித்து அரசமரபு (Ghurids or Ghorids) (பாரசீக மொழி: سلسله غوریان; self-designation: شنسبانی, Shansabānī) கிழக்கு பாரசீகத்தின் தற்கால மத்திய ஆப்கானித்தானின் கோர் பிரதேசத்தில் வாழ்ந்த கோரி மக்கள் பௌத்த சமயத்திலிருந்து இசுலாமிய சமயத்திற்கு மதம் மாறியவர்கள். [17]கோரி வம்சத்தின் முதல் பேரரசரான அபு அலி இபினு முகமதுவின் (1011 – 1035) (ஆட்சிக் காலத்தில், கோர் பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டது.
கோரி அரசமரபு | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
786க்கு முன்–1215 | |||||||||||||||||||||||
தலைநகரம் | பிரோசுகோக்கு[9] ஹெறாத் நகரம்[10] காசுனி (1170கள்–1215)[11] | ||||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீக மொழி (அரசவை, இலக்கியம்)[12][13] | ||||||||||||||||||||||
சமயம் | பொ. ஊ. 1011க்கு முன்: பாகால்[14] பொ. ஊ. 1011இல் இருந்து: சன்னி இசுலாம்[15] | ||||||||||||||||||||||
அரசாங்கம் | வாரிசு வழி முடியரசு இரட்டை ஆட்சி (1173-1203) | ||||||||||||||||||||||
மாலிக்/சுல்தான் | |||||||||||||||||||||||
• 8ஆம் நூற்றாண்டு | அமீர் பஞ்சி (முதல்) | ||||||||||||||||||||||
• 1214–1215 | அலாவல்தீன் அலி (கடைசி) | ||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||
• தொடக்கம் | 786க்கு முன் | ||||||||||||||||||||||
• முடிவு | 1215 | ||||||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||||||
1200 மதிப்பீடு.[16] | 2,000,000 km2 (770,000 sq mi) | ||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் |
1186ல் கசானவித்து வம்ச சுல்தான் குசரவ் மாலிக்கின் தலைநகரான லாகூரைக் கைப்பற்றி, கசானவித்து வம்ச ஆட்சியை கோரி வம்சத்தினர் முடிவுக்கு கொண்டு வந்தனர்.[18]
கோரி வம்சத்தினர் ஆட்சியின் உச்சத்தில் மேற்கே ஈரானின் குராசான் முதல், கிழக்கே வங்காளம் உள்ளிட்ட தற்கால ஈரான், நடு ஆசியாவின் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான், கசகஸ்தான் மற்றும் தெற்காசியாவின் ஆப்கானித்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் வட இந்தியா பகுதிகள் இருந்தது. [19]
கோரி வம்சத்தினரனது முதல் தலைநகரமாக பிரோசோக் நகரமும், இறுதித் தலைநகரமாக ஹெறாத் நகரமும் விளங்கியது.[10] இருப்பினும் குளிர்க் காலத்தில் கசினி [11] மற்றும் லாகூர் நகரங்கள் கூடுதல் தலைநகரங்களாக இருந்தது. கோரி வம்சத்தினர் பாரசீகப் பண்பாட்டையும், மரபுகளையும் பேணிக் காத்தனர். [20]