கொல்கத்தா துர்கா பூஜை
கொல்கத்தா மாநகரில் துர்கா பூஜை கொண்டாட்டம் / From Wikipedia, the free encyclopedia
கொல்கத்தா துர்கா பூஜை என்பது ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஆண்டு விழா ஆகும். இது இந்து மதத் தாய் தெய்வமான துர்கா வழிபாட்டைக் குறிக்கிறது.[1][2] இந்த திருவிழா மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் பெங்காலிகளால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை மற்றும் மத விழாவாகும்.[3][4] மேலும், இது கொல்கத்தாவில் பெங்காலி இந்துக்கள் அல்லது இந்துக்களின் மிகப்பெரிய மத விழாவாகவும் உள்ளது.[4]
கொல்கத்தா துர்கா பூஜை Durga Puja in Kolkata | |
---|---|
கொல்கத்தா பூந்தோட்ட சந்தையில் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது | |
நாடு | இந்தியா |
மேற்கோள் | 703 |
இடம் | ஆசிய பசிபிக் |
கல்வெட்டு வரலாறு | |
கல்வெட்டு | 2021 (16வது அமர்வு) |
பட்டியல் | பிரதிநிதி |
சான்றிதழ் : direct link |
கொல்கத்தாவில் சுமார் 3,000 பரோவாரி எனப்படும்பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் கொல்கத்தா நகரில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பூஜைகள் பெரும் பொருட்செலவில் (கோடி ரூபாய்) ஏற்பாடு செய்யப்படுகின்றன.[5]
கொல்கத்தாவில் கொண்டாடப்படும் துர்கா பூஜையினை 2021ஆம் ஆண்டு திசம்பரில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமான-யுனெஸ்கோ 'மனிதக்குலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியம் ' எனப் பட்டியலிட்டது.[6]