கொல்கத்தா அறிவியல் நகரம்
From Wikipedia, the free encyclopedia
கொல்கத்தா அறிவியல் நகரம் (Science City Kolkata) என்பது ஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் மையமாகும்.[4] இது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் தேசிய அறிவியல் அருங்காட்சியக சபையினால் நிர்வகிக்கப்படுகிறது. இது கிழக்கு டாப்சியாவில் கிழக்கு பெருநகர புறவழி மற்றும் ஜே. பி. எஸ். ஆல்டேன் பகுதியினை (பரமா தீவு) கடக்கும் இடத்தில் அமைந்துள்ளது. தேசிய அறிவியல் அருங்காட்சியக சபையின் முதல் தலைமை இயக்குநர் சரோஜ் கோசு[5] இந்த மையத்தை கருத்தியல் செய்த பெருமைக்குரியவர். இந்த மையம் இரண்டு பகுதிகளாகத் திறக்கப்பட்டது: 'மாநாட்டு மைய வளாகம்' 21 திசம்பர் 1996-ல் அப்போதைய மேற்கு வங்காள முதல்வர் ஜோதி பாசு முன்னிலையில் பால் சோசப் கிரட்சனால் திறந்து வைக்கப்பட்டது. முழு மையத்தையும் அப்போதைய பிரதமர் இந்தர் குமார் குஜரால் சூலை 1, 1997 அன்று திறந்து வைத்தார். 10 சனவரி 2010 அன்று, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மேற்கு வங்காளத்தின் அப்போதைய முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா முன்னிலையில் அறிவியல் நகரத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.[6] அறிவியல் மாணவர்கள் மகிழ்வதற்கும் ஏற்ற இடம் இதுவாகும்.
கொல்கத்தா அறிவியல் நகரம் | |
உருவாக்கம் | 1 சூலை 1997 |
---|---|
வகை | அறிவியல் மையம் |
சட்ட நிலை | அரசு |
நோக்கம் | கல்வி |
தலைமையகம் | கொல்கத்தா |
தலைமையகம் | |
சேவை பகுதி | கொல்கத்தா |
இயக்குநர் | அணுராக் குமார் |
தாய் அமைப்பு | தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபை |
பணிக்குழாம் | 72[1] |
வலைத்தளம் | www |
கருத்துகள் | பார்வையாளர்கள்: 1,597,000 (2016)[2] தளவசதி: 32,064 m²[3] |