கிரண் தேசாய்
From Wikipedia, the free encyclopedia
கிரண் தேசாய் (Kiran Desai, பிறப்பு: செப்டம்பர் 3, 1971) இந்தியாவில் பிறந்த பெண் எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய த இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ் (The Inheritance of Loss) என்னும் ஆங்கில நாவலுக்கு 2006 ஆம் ஆண்டுக்குரிய புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. புக்கர் பரிசு பெற்ற மிகக் குறைந்த வயதுடைய பெண் எழுத்தாளர் என்ற பெயரையும் பெற்றுள்ள இவர், புகழ் பெற்ற பெண் எழுத்தாளரான அனிதா தேசாயின் மகளாவார். அனிதா தேசாய் புக்கர் பரிசுக்காக மூன்று முறை இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், அவருக்கு இப்பரிசு கிடைக்கவில்லை.
கிரண் தேசாய் | |
---|---|
கிரண் தேசாய், 2007 | |
பிறப்பு | கிரண் தேசாய் Kiran Desai செப்டம்பர் 3, 1971 (1971-09-03) (அகவை 52) புது தில்லி, இந்தியா |
தொழில் | புதின எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
காலம் | 1998 - இன்று |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | The Inheritance of Loss |
குறிப்பிடத்தக்க விருதுகள் | புக்கர் பரிசு (2006) |
கிரண் தேசாய் 1971 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி இந்தியாவின் தலை நகரமான புதுடில்லியில் பிறந்தார். இவருக்கு 14 வயதானபோது, இவரது குடும்பம் ஐக்கிய இராச்சியத்துக்குக் குடிபெயர்ந்தது. அடுத்த ஆண்டே இவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினர்.
கிரண் தேசாய் தனது பாடசாலைக் கல்வியை மசச்சூசெட்ஸ் இல் பெற்றுக்கொண்டார். பின்னர், ஹொலின்ஸ் பல்கலைக் கழகத்தின், பென்னிங்டன் கல்லூரியிலும், கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.
இவரது எழுத்தில் இவரது தாயார் அனிதா தேசாய் தாக்கம் உண்டு.