கல்லீரல்நோய் மூளைக்கோளாறு
From Wikipedia, the free encyclopedia
கல்லீரல்நோய் மூளைக்கோளாறு (Hepatic encephalopathy) அல்லது ஈரல்சிரையமைப்பு மூளைக்கோளாறு (portosystemic encephalopathy) என்பது கல்லீரல் செயலிழப்பால் மனக்குழப்பம், சுய உணர்வுநிலை தடுமாற்றம் ,ஆழ்துயில் என்பன தோன்றுவதைக் குறிக்கிறது. இதன் முற்றிய நிலைகளில் ஈரல் ஆழ்துயில் அல்லது கோமா எப்பாடிகம் என அழைக்கப்படுகின்றது. இறுதியில் மரணமும் நேரிடலாம். [1]
கல்லீரல்நோய் மூளைக்கோளாறு | |
---|---|
கல்லீரல் மூளைக்கோளாறின்போது காணப்படும் அல்சுமைர் இரண்டாம்வகை நரம்பு நார்த்திசுக்களின் நுண்வரைவி. | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | இரையகக் குடலியவியல், hepatology, infectious diseases, அவசர மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | K72. |
ஐ.சி.டி.-9 | 572.2 |
மெரிசின்பிளசு | 000302 |
ஈமெடிசின் | med/3185 article/182208 |
ம.பா.த | D006501 |
கல்லீரலினால் வழமையாக நீக்கப்படும் நச்சுப்பொருட்கள் அதன் செயலிழப்பால் குருதியோட்டத்தில் அதிகரிப்பதனால் இந்த நிலைமை ஏற்படுகிறது. கல்லீரலின் செயல்பாட்டுக் குறைவும் இந்நிலைக்கான மாற்றுக் காரணங்கள் இல்லாத நிலையும் கொண்டு இந்த நோய் அறுதியிடப்படுகிறது. குருதிச் சோதனைகளில் அம்மோனியா கூடுதளளவில் காணப்படுவதும் அறுதியிடலுக்குத் துணை புரிகிறது. கூடவே நிகழும் ஏதேனும் நோய்த்தொற்று அல்லது மலச்சிக்கல் மூலம் இந்தத் தாக்குதல்கள் தூண்டப்படுகின்றன. [1][2]
இந்த நோய் நிலைமை சிகிட்சை மூலம் மீளக்கூடியது. குடலில் நச்சுப்பொருட்கள் உற்பத்தியாகாது தடுப்பதன் மூலம் சிகிட்சை அளிக்கப்படுகிறது. பொதுவாக லாக்டோலோசு என்ற மலமிளக்கிகளைக் கொண்டோ அல்லது உள்வாங்காத நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொண்டோ இவ்வாறு தடுக்கப்படுகிறது. இதைத் தவிர, அடிப்படையான காரணங்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவமும் நோய் அறிகுறிகளைக் குறைக்க உதவும். கடிய கல்லீரல் செயலிழப்பு போன்ற சில நேரங்களில் கல்லீரல் நோய் மூளைக்கோளாறு தோன்றுதல் மாற்றுக் கல்லீரல் சிகிட்சைக்கான தேவையை அறிவிப்பதாக அமையும்.[1][3]