ககதவால வம்சம்
From Wikipedia, the free encyclopedia
ககதவால வம்சம் ( Gahadavala dynasty ), கன்னோசியின் ககதவாலர்கள், என்றும் அறியப்படும் இவர்கள் 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் இன்றைய இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் பகுதிகளை ஆண்ட ராஜபுத்திர வம்சமாகும். இவர்களின் தலைநகரம் சிந்து-கங்கைச் சமவெளியில் வாரணாசியில் அமைந்திருந்தது. மேலும் சிறிது காலத்திற்கு, இவர்கள் கன்யாகுப்ஜத்தை (நவீன கன்னோசி) கட்டுப்படுத்தினர்.
ககதவால வம்சம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1089 கி.பி–1197 கி.பி | |||||||||||||
காலசூரி-பாணி நாணயம்.
| |||||||||||||
தலைநகரம் | வாரணாசி , கன்னோசி | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | 1089 கி.பி | ||||||||||||
• முடிவு | 1197 கி.பி | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
வம்சத்தின் முதல் மன்னரான சந்திரதேவன், கி.பி 1090 -க்கு முன்னர், காலச்சூரி அதிகாரத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு இறையாண்மை கொண்ட அரசை நிறுவினார். இவரது பேரன் கோவிந்தச்சந்திரனின் கீழ் இராச்சியம் அதன் உச்சத்தை அடைந்தது. அவர் சில கலாச்சூரி பிரதேசங்களை இணைத்து, கசனவித்துகளின் தாக்குதல்களைத் தடுத்து, பாலர்களுடன் போரிட்டார். கி.பி.1194 -இல், கோவிந்தச்சந்திரனின் பேரன் செயச்சந்திரன் கோரிகளால் தோற்கடிக்கப்பட்டார். இது வம்சத்தின் ஏகாதிபத்திய அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 12 ஆம் நூற்றாண்டில் ஜெயச்சந்திரனின் வாரிசுகள் தில்லி சுல்தானகத்தால் தோற்கடிக்கப்பட்டபோது இராச்சியம் இல்லாமல் போனது.