![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a8/Irom_sharmila1.jpg/640px-Irom_sharmila1.jpg&w=640&q=50)
ஐரோம் சர்மிளா
From Wikipedia, the free encyclopedia
ஐரோம் சானு சர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர்[1]. மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார்[2]. இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வந்தது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்[3].
விரைவான உண்மைகள் ஐரோம் சானு சர்மிளா, பிறப்பு ...
ஐரோம் சானு சர்மிளா | |
---|---|
![]() கோழிக்கோட்டில் விருது வழங்கும் விழாவில் ஐரோம் சர்மிளா | |
பிறப்பு | மார்ச்சு 14, 1972 (1972-03-14) (அகவை 52) கொங்பால், இம்பாலா, மணிப்பூர், இந்தியா |
பணி | மனித மற்றும் சமூக உரிமை ஆர்வலர், அரசியலாளர் |
அறியப்படுவது | ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்திற்கு எதிரான உண்ணாநோன்பு |
பெற்றோர் | ஐரோம் சி நந்தா (தந்தை) இரோம் ஓங்பி சக்தி (தாய்) |
மூடு
ஆகஸ்ட் 9, 2016 அன்று தனது 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார். மணிப்பூர் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங்கிற்கு எதிராகத் தாம் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.[4]