உத்தராகண்டம்
இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
உத்தராகண்டம் [8] (Uttarakhand, இந்தி: उत्तराखण्ड) இந்தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலம் 9 நவம்பர் 2000-இல் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு இந்தியக் குடியரசின் 27 ஆவது மாநிலமாக உருவானது [9]. 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரைக்கும் உத்தராஞ்சல் [10] என அழைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் ஏராளமான இந்து கோயில்களும் புனிதத்தலங்களும் காணப்படுவதால் பெரும்பாலும் மக்கள் இம்மாநிலத்தை தேவபூமி என்றும் கடவுள்களின் நிலம் என்றும் கருதுகிறார்கள் [11]. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் இமயமலையில் அமைந்துள்ளது.
உத்தராகண்டம்
உத்தராஞ்சல் | |
---|---|
சின்னம் | |
பண்: உத்தரகண்ட் தேவபூமி மத்ரிபூமி (உத்தரகண்ட், கடவுளின் நிலம், தாய்நாட்டே!) | |
உத்தராகண்டம் வரைபடம் | |
நாடு | இந்தியா |
பகுதி | வட இந்தியா |
நிறுவப்பட்ட நாள் | 9 நவம்பர் 2000 (உத்தரகண்ட் நாள்) |
தலைநகரம் | பரரிசைன் (கோடை) தேராதூன் (குளிர்காலம்) |
மாவட்டங்கள் | |
அரசு | |
• நிர்வாகம் | உத்தராகண்டு அரசு |
• ஆளுநர் | குர்மீட் சிங் |
• முதலமைச்சர் | புஷ்கர் சிங் தாமி |
• சட்டப் பேரவை | உத்தராகண்டச் சட்டமன்றம்
ஓரவை (70 உறுப்பினர்கள்) |
• நாடாளுமன்ற தொகுதிகள் |
|
• உயர் நீதிமன்றம் | உத்தராகண்டு உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 53,483 km2 (20,650 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 19வது |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,00,86,292 |
• தரவரிசை | 27வது |
• அடர்த்தி | 190/km2 (490/sq mi) |
GDP (nominal) (2019–20) | |
• மொத்தம் | ₹2.93 டிரில்லியன் (US$37 பில்லியன்) [2] |
• தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி | ₹2,20,275 (US$2,800) |
மொழி | |
• அலுவல்மொழி | இந்தி[3] |
• கூடுதல் அலுவல்மொழி | சமசுகிருதம்[4][4] |
• பூர்வீகம் | கர்வாலி, குமாவோனி மற்றும் ஜான்சாரி |
நேர வலயம் | ஒசநே+05:30 (இசீநே) |
தொலைபேசி | +91 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-UT |
வாகனப் பதிவு | UK |
மனித மேம்பாட்டுச் சுட்டெண்(2018) | 0.684[5][6] medium (18வது) |
படிப்பறிவு (2011) | 87.60%[7] (17வது) |
பாலின விகிதம் (2011) | 963 ♀/1000 ♂[7] (14வது) |
இணையதளம் | uk |
வடக்கில் சீனாவின் திபெத்தும். கிழக்கில் நேபாளமும், தெற்கில் உத்தரப்பிரதேச மாநிலமும், மேற்கிலும் வடமேற்கிலும் இமயமலையும் இம்மாநிலத்திற்கு எல்லைகளாக உள்ளன. கார்வால் கோட்டம். குமாவுன் கோட்டம் என்ற இரண்டு கோட்டங்களாக உத்தராகண்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டங்களில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளன. தேராதூன் உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நைனிடால் நகரில் உள்ளது.
வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்தே இப்பகுதியில் மனிதர்கள் இருந்துள்ளார்கள் என்பதற்கான தொல்பொருள் சான்றுகள் உள்ளன. பண்டைய இந்தியாவின் வேத யுகத்தில் இப்பகுதி உத்தரகுரு இராச்சியத்தின் ஒரு பகுதியாக உருவாகியிருந்த்து. குமாவோன் பேரரசின் முதல் பெரிய வம்சங்களில் கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குனிந்தர்கள் இருந்தனர். அவர்கள் சைவ மதத்தின் ஆரம்ப வடிவத்தை கடைப்பிடித்தனர். கல்சியில் உள்ள அசோகரின் கட்டளைகள் இந்த பிராந்தியத்தில் புத்தமதத்தின் ஆரம்பகால இருப்பைக் காட்டுகின்றன. இடைக்காலத்தில் குமாவோன் இராச்சியம் மற்றும் கார்வால் இராச்சியத்தின் கீழ் இப்பகுதி ஒருங்கிணைக்கப்பட்டது. 1816 ஆம் ஆண்டில், நவீன உத்தராகண்டின் பெரும்பகுதி சுகாலி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கார்வால் மற்றும் குமாவோனின் முந்தைய மலை இராச்சியங்கள் பாரம்பரிய போட்டியாளர்களாக இருந்தபோதிலும், வெவ்வேறு அண்டை இனக்குழுக்களின் அருகாமையும் அவற்றின் புவியியல், பொருளாதாரம், கலாச்சாரம், மொழி மற்றும் மரபுகளின் பிரிக்கமுடியாத நிரப்பு தன்மை ஆகியன இரு பிராந்தியங்களுக்கிடையில் வலுவான பிணைப்புகளை உருவாக்கியது.1990 களில் மாநிலத்தில் நிகழ்ந்த உத்தரகண்ட இயக்கங்கள் இப்பிணைப்பை மேலும் வலிமையாக்கின. இம்மாநிலத்தின் பூர்வீகவாசிகள் பொதுவாக உத்தரகாண்டி என்று அழைக்கப்படுகிறார்கள், அல்லது இன்னும் குறிப்பாக கார்வாலி அல்லது குமாவோனி என்று அழைக்கப்படுகிறார்கள். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தின் மக்கள் தொகை 10,086,292 ஆகும், இது இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 20 வது மாநிலமாக திகழ்கிறது [12]. முசோரி, அல்மோரா, ராணிக்கெட், ரூர்க்கி ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். இந்து சமயத் திருத்தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.