இந்திராகாந்தி படுகொலை
From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் மூன்றாவது தலைமை அமைச்சரான இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் காலை 09:20 மணியளவில், புது தில்லி, சப்தர்ஜங் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் சத்வந்த் சிங், பியாந்த் சிங் என்ற அவரது இரு பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1][2][3] 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமிருதசரசு நகரிலுள்ள சீக்கியர்களின் முக்கிய கோயிலான பொற்கோயிலை இந்திய இராணுவத்தினர் தாக்கிய புளூஸ்டார் நடவடிக்கையால் பொற்கோயில் பெரிதும் சேதமடைந்தது. இந்நடவடிக்கையின் எதிர்விளைவே இவரது படுகொலையாகும்.[4]