ஆம் ஆத்மி கட்சி
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
ஆம் ஆத்மி கட்சி (ஆங்கிலம்: Aam Aadmi Party; தேவநாகரி: आम आदमी पार्टी; மொ.பெ. சாதாரண மனிதனின் கட்சி; சுருக்கம் ஆ.ஆ.க.) 2012 இல் ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட இந்திய அரசியல் கட்சியாகும். இது, சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவாலால் 26 நவம்பர் 2012ல் தில்லியில் தொடங்கப்பட்டது.[22][23]
ஆம் ஆத்மி கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | AAP |
தலைவர் | அரவிந்த் கெஜ்ரிவால் (தில்லி முதல்வர்) |
நிறுவனர் | அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பலர் |
மாநிலங்களவைத் தலைவர் | சஞ்சய் சிங் |
தொடக்கம் | 26 நவம்பர் 2012 (11 ஆண்டுகள் முன்னர்) (2012-11-26) |
தலைமையகம் | 206, ரௌஸ் அவென்யூ, தீன் தயாள் உபாத்யாய் மார்க், ஐடிஓ, புது தில்லி, இந்தியா-110002[1] |
மாணவர் அமைப்பு | சத்ர யுவ சங்கர்ஷ் சமிதி (CYSS)[2] |
இளைஞர் அமைப்பு | ஆம் ஆத்மி கட்சி இளைஞர் பிரிவு (AYW)[3] |
பெண்கள் அமைப்பு | ஆம் ஆத்மி கட்சி மகிளா சக்தி(AMS)[4] |
தொழிலாளர் அமைப்பு | ஷ்ராமிக் விகாஸ் சங்கதன் (SVS)[5][6][7][8] |
உறுப்பினர் | 10.05 மில்லியன் (2014)[9][needs update] |
கொள்கை | சமூக தாராளமயம்[10][11][12] ஜனரஞ்சகவாதம்[13] ஊழல் எதிர்ப்பு[14] மதச்சார்பின்மை[15] தேசியவாதம்[16][17][18] மனிதநேயம்[19] |
அரசியல் நிலைப்பாடு | மையம் முதல்[20] மத்திய-இடது[12][21] வரை |
நிறங்கள் | நீலம் |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி (தில்லி, பஞ்சாப் & கோவா) |
தேசியக் கூட்டுநர் | அரவிந்த் கெஜ்ரிவால் |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 10 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநிலச் சட்டப் பேரவைகள்) | 157 / 4,036 பட்டியல் 92 / 117 (பஞ்சாப் சட்டமன்றம்)
62 / 70 (தில்லி சட்டமன்றம்)
2 / 40 (கோவா சட்டமன்றம்)
1 / 182 (குசராத்து சட்டமன்றம்)
|
தேர்தல் சின்னம் | |
துடைப்பம் | |
இணையதளம் | |
aamaadmiparty | |
இந்தியா அரசியல் |
ஜன் லோக்பால் மசோதாவைக் கோரி 2011-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் இயக்கத்தை அரசியலாக்க வேண்டும் என்ற சிந்தனையில் இந்த கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கினார்.
இந்தக் கட்சி உருவாகியது முதல், ஊழலுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது. டெல்லியில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தின் விலை ஏற்றத்திற்கு காரணம் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கழகங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தியது. கற்பழிப்பிற்கு எதிரான கடுமையான சட்டத்தை அறிமுகப்படுத்தக் கோரி, கற்பழிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது.[24][25][26]
2013 தில்லி சட்ட பேரவை தேர்தலில் அறிமுகமான இந்தக் கட்சி தில்லியில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2013 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் படி இக்கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 28 இடங்களை வென்றது.[27].