அந்திரேயா பலாடியோ
From Wikipedia, the free encyclopedia
அந்திரேயா பலாடியோ (Andrea Palladio, 30 நவம்பர் 1508 – 19 ஆகத்து 1580) வெனிசுக் குடியரசில் செயற்பட்டுவந்த ஒரு இத்தாலியக் கட்டிடக்கலைஞர். உரோம, கிரேக்கக் கட்டிடக் கலையினதும், விட்ருவியசினதும் செல்வாக்குக்கு உட்பட்ட பல்லாடியோ, கட்டிடக்கலை வரலாற்றில் பெரிய அளவில் செல்வாக்குச் செலுத்திய ஒருவராகக் கருதப்படுகின்றார். இவருடைய கட்டிடங்கள் எல்லாமே வெனிசுக் குடியரசுப் பகுதிகளிலேயே அமைந்திருந்தன. ஆனால், அவரது கற்பித்தல்களின் சுருக்கம் கட்டிடக்கலையின் நான்கு புத்தகங்கள் என்னும் ஆய்வு நூலில் தரப்பட்டதால் அவருக்குப் பரவலான ஏற்புக் கிடைத்தது.[2] விச்சென்சா நகரம், அதன் 23 கட்டிடங்களுடன் பல்லாடியோவினால் வடிவமைக்கப்பட்டது. வெனெட்டோவின் பல்லேடியன் வில்லாக்கள் ஒருங்கே யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியல் இடப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் அந்திரேயா பலாடியோ, தனிப்பட்ட விவரங்கள் ...
அந்திரேயா பலாடியோ | |
---|---|
17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பலாடியோவின் உருவப்படம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | இத்தாலியர்[1] |
பிறப்பு | (1508-11-30)30 நவம்பர் 1508 படோவா, வெனிசுக் குடியரசு |
இறப்பு | 19 ஆகத்து 1580(1580-08-19) (அகவை 71) டிரெவிசோவுக்கு அண்மையில் உள்ள மாசெர் |
பணி | |
கட்டிடங்கள் | வில்லா பார்பரோ வில்லா கப்ரா லா ரொட்டொன்டா பசிலிக்கா பல்லாடியானா சான் ஜோர்ஜ் மகியோரே தேவாலயம் இல் ரெடென்டோர் Teatro Olimpico |
திட்டங்கள் | I Quattro Libri dell'Architettura (கட்டிடக்கலையின் நான்கு புத்தகங்கள்) |
மூடு